ஆரே காலனியில் மரங்களை வெட்டக் கூடாது: உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மெட்ரோ ரயில்நிலையத்துக்கான கட்டுமானத்துக்காக ஆரே காலனியில் மரங்களை வெட்டக் கூடாது என்று  உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.


மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் ஆரே காலனி பகுதியில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டுமானத்துக்காக மரங்கள் வெட்டப்படும் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.


தற்போதைக்கு எந்த மரத்தையும் வெட்டக் கூடாது என்று நீதிபதிகள் உறுதிபடக் கூறிவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.


முன்னதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த நொய்டாவைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலர், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.